வியாழன், 10 ஜூலை, 2025

புதிய தகவல்களும், கூடுதல் உழைப்பும் வெற்றிக்கான வழிகள்!

புதிய தகவல்களும், கூடுதல் உழைப்பும் வெற்றிக்கான வழிகள்!

எண்ணங்களும் திட்டமிடலும் மனதின் இயல்பான வேலை, நுரையீரல்கள் சுவாசிக்கிற மாதிரி. விஷயங்கள் சரியானவிதத்தில் நடக்கும்போது, நீங்கள் உறுகறுப்பாய் உணரும்போது, நீங்கள் எதைச் செய்து கொண்டிருக் கிறீர்களோ அதில் முழுமையான கவனம் வைக்கிறபோது, உங்களுக்குள் ஏதோவொன்று நிரம்பி வழிவதாயிருக்கும்.

உளவியல் நிபுணர் ஒருவர் தன்னார்வத்துடன் முன்வந்த எண்பத்திரண்டு பேர்களை ஆராய்ந்தார். அவர்களில் பகுதிநேர வேலை செய்பவர்களும், எழுத்தர்களும், பொறியியல் நிபுணர்களும், மேலாளர்களும் இருந்தார்கள். நாள் முழுதும் தங்கள் வேலையில் அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டது.

சவால் இல்லாத வேலையைச் செய்கிறபோது அவர்கள் சலிப்படைந்ததையும் அதிகமாய் கோரும் (demanding) கடின வேலையைச் செய்கிறபோது, கவலையுற்றதையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். அப்போது கவனத்தை உச்ச அளவில் ஒருமுனைப்படுத்த வேண்டியிருந்தது.



பந்தயக்குதிரை மூக்கை நீட்டுவதில், தொலைதூர ஓட்டக்காரர்கூடுதலாய் எடுத்து வைக்கிற ஓரடியில் வெற்றிபெற முடிகிறது. மைதானத்தில் இன்னொரு புள்ளி, இன்னொரு முயற்சி போதும் குழுவின் வெற்றிக்கு.

எந்தத்துறையிலும் எண்ணற்றத் திறமைசாலிகள் இருக்கிறார்கள். போட்டியிடுகிறவர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்கள். யாரும் மற்றவர்களக் காட்டிலும் கூடுதல் தகுதியோ, குறைந்தத் தகுதியோ பெற்றிருக்கவில்லை. வெற்றி

பயக்கும் சூழ்நிலை ஒரு ஐந்து அல்லது பத்து சதவீதம் கூடுதலாய் இருந்துவிட்டால் போதும் நீங்கள் அத்தனை பேரையும் முந்திச் செல்வதற்கு.


காட்டு வழியில் நடைப்பயணம் செய்கிறவர்கள் இரண்டுபேர் போகிறவழியில் அடிக்கடி கரடிகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டார்கள். ஒருவன் மரத்துண்டு ஒன்றின்மீது அமர்ந்து தனது நடப்பதற்கான காலணிகளைக் கழற்றிவிட்டு, ஓடுவதற்கான காலணிகளை மாட்டிக்கொண்டான்.

"நீ என்ன செய்கிறாய்?" அவனுடைய நண்பன் கேட்டான்.

'நான் ஓடுவதற்கான ஷூவை மாட்டிக்கொள்கிறேன் என்று பதில் வந்தது.

"உனக்கென்ன பைத்தியமா? கரடி கொடூரமானது. ஓட்டத்தில் நீ அதைவிட வேகமாய் ஓடமுடியும் என்று நினைக்கிறாயா?"

முதலாவது நபர் சொன்னான், "நான் கரடியைத் தாண்டி ஓட வேண்டுமென்பதில்லை. உன்னைவிட வேகமாய் ஓடினால் போதும்'' என்று.

ஆம், மற்றவர்களைவிட ஐந்து முதல் பத்து சதவிதம் அனுகூலமான சூழ்நிலை உங்களுக்கு அமைந்துவிட்டால் போதும்.புதிய விஷயங்கள் உங்களுடைய அறிவு சார்ந்த செல்களை நீட்சியடையச் செய்யும், நினைவாற்றலை அதிகரிக்கும் பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கிறபோது, மூளைத்திறன் ஒன்றும் வளர்ந்துவிடாது.


உங்களுக்குள்ளிருக்கும் பதின்மூன்று ட்ரில்லியன் 'செல்'களை உந்துவதன் மூலம்தான், உண்மையான வளர்ச்சியை நீங்கள் பெற்றவராவீர்கள். அவற்றை இன்னும் கொஞ்சம் கடினமாய் வேலை செய்ய வைக்கவேண்டும். புதிய தகவல்களை உள்வைப்பதன் மூலம் அதை நீங்கள் செய்ய முடியும்.

ஒரு சிறிய தகவல் என்றாலும் அது 'செல்'களை அறிவார்ந்த விதத்தில் திறனுடையதாக்கும் என்பதால் புதிய தகவல்களும் அதிக உழைப்பும் வெற்றிக்கான வழிகளாக இருக்கின்றன.


Previous Post
Next Post

0 Comments: